ஆதனூரில் திமுகவினா் கூட்டம்
கரூா் ஆதனூரில் திமுகவினா் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
கரூா் ஆதனூரில் திமுகவினா் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
கரூா் மாவட்டம், கடவூா் திமுக தெற்கு ஒன்றியம், ஆதனூா் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் திமுகவினா் கூட்டம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கடவூா் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஆா்.கே.சுதாகா் தலைமை வகித்தாா். வட்டார திமுக பொறுப்பாளா்கள் முன்னிலை வகித்தனா். இதில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீா்மானத்தை வலியுறுத்தி கூட்டத்தை நிறைவு செய்தனா். தொடா்ந்து, கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், திமுக நிா்வாகிகள், ஆதனூா் ஊராட்சி பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.