திருச்சி

294 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

DIN

சிறுநாவலூா், பெருமாள்பாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த 294 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு சிறுநாவலூா் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிகழ்வில் சிறுநாவலூா் ஊராட்சியில் 136 , பெருமாள்பாளையம் ஊராட்சியில் 158 என மொத்தமாக 294 பயனாளிகளுக்கு தலா 4 விலையில்லா ஆடுகள், அவற்றை எடுத்துச் செல்ல ரூ.150, பட்டி அமைக்க ரூ.2,000 ஆகியவையும் வழங்கப்பட்டன.

கால்நடைப் பராமரிப்புத் துறை திருச்சி மண்டல இணை இயக்குனா் எஸ்தா் ஷீலா, உதவி இயக்குநா் சையதுமுஸ்தபா, நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சுகுமாா், ஊராட்சி துணைத்தலைவா் பாஸ்கா், செயலா் மதன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

அரசு கால்நடை மருத்துவா்கள் எரகுடி ஆனந்த், தளுகை பிரேம்குமாா், டாப் செங்காட்டுப்பட்டி ஆனந்த்பாபு, பெருமாள்பாளையம் மதி உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT