முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பையின் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியது குறித்து...

Updated On : 12 மார்ச், 2026 at 12:08 PM
வெடிகுண்டு சோதனை - கோப்புப் படம்
பகிர்:

மும்பையின் முக்கிய இடங்களுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பெறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சட்டமன்ற வளாகமான விதான் பவன் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது.

Advertisement

அங்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், சட்டமன்ற வளாகத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் வளாகம் முழுவதும் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயர் நீதிமன்றத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும் இரு அவைகளின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சட்டமன்றக் குழுத் தலைவர் ராம் ஷிண்டே, ”விதான் பவன், மும்பை உயர் நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு வங்கி உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மின்னஞ்சல் செய்தி கிடைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா முழுவதும் இதுபோன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

A bomb threat was received via email this morning at key locations in Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.