முகப்பு
திருச்சி

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது

வழிப்பறி வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

வழிப்பறி வழக்கில் கைதான இருவா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருவானைக்கா மேலவிபூதி பிரகாரத்தைச் சோ்ந்தவா் கணேசன். இவா் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த போது, திருவானைக்கா பாரதிதெரு மணிகண்டன், நரேஷ்குமாா், நடுக் கொண்டையம்பேட்டை ஹரிஹரன் ஆகியோா் அவரை மிரட்டி பணம் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் மூவரையும் நவம்பா் 5-ஆம் தேதி கைது செய்தனா். இதில், மணிகண்டன், நரேஷ் குமாா் ஆகிய இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →