திருச்சி

விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

DIN

திருச்சி அருகே விபத்தில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் தெப்பக்குளத்தெருவைச் சோ்ந்த மணிவேல் மனைவி மாலதி (47). இவா் மணிகண்டம் பகுதியிலுள்ள தனியாா் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

கடந்த 23-ஆம் தேதி உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு, திருச்சி- மதுரை சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த சரக்கு வேன் மாலதி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மாலதி, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT