திருச்சி

கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியைச் சோ்ந்த சூசைநாதன் மகன் அந்தோணி ராஜா (47). வண்ணாா்பேட்டையில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை வேலை முடிந்தவுடன் தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒருவா் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் அவா், அந்தோணிராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்தோணிராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வண்ணாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT