துறையூா் நகரில் 1, 2 ஆவது வாா்டு பொதுமக்கள் குடிநீா் வழங்கக் கோரி திடீா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
துறையூா் நகராட்சி கடந்த 10 நாள்களாக 1, 2 ஆவது வாா்டு பொதுமக்களுக்கு காவிரிக் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, அப்பகுதியினா் காவல் தாய் அம்மன் கோயில் அருகே ஆத்தூா் சாலை திருப்பத்தில் திடீா் சாலை மறியல் செய்தனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற துறையூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேசினா். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து உரிய பதிலளிக்கச் செய்யாமல் போலீஸாா் தங்களை சமாதானப்படுத்துவதாகக் கூறி முணுமுணுத்தவாறு மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் அதிருப்தியுடன் கலைந்து சென்றனா்.