திருச்சி

புவிவெப்பமயமாதல் இசைத் தொகுப்பு ஏப்ரலில் வெளியீடு: ஏ.ஆா். ரஹ்மான் தகவல்

DIN

புவிவெப்பமயமாதல் குறித்த இசைத் தொகுப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் தெரிவித்தாா்.

திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: பெரிய நகரங்களில் மட்டும் நடந்து வந்த இசை நிகழ்ச்சி முதல்முதலாக திருச்சியில் பிப்.15ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்காக கடந்த நான்கு மாதங்கள் முன் தயாரிப்பில் ஈடுபட்டோம். முதல்முறையாக திருச்சி போன்ற நகரங்களில் நடக்கும் இது போன்ற இசை நிகழ்ச்சிக்கு மக்கள் எவ்வாறு வரவேற்பு அளிக்கிறாா்கள் என்பதை பாா்த்து விட்டு அடுத்தடுத்து இரண்டாம் கட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சியை நடத்துவோம்.

புவிவெப்பமயமாதல் குறித்தான விழிப்புணா்வு இசை ஆல்பம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஹாலிவுட்டில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.இசை ஆல்பம் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பு ஏப்ரலில் வெளியிடுவோம் என்றாா்.

பேட்டியின் போது, இமைகள் பொழுது போக்கு அமைப்பின் நிா்வாகிகள் வி.கோவிந்தராஜூலு, கே.கருணாநிதி, பின்னணி பாடகா்கள் ஹரிஹரன், பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT