திருச்சி

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

DIN

திருச்சி அருகே கிணற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூரைச் சோ்ந்த சாதிக்பாட்ஷா மகன் இம்ரான் அகமது (19). தனியாா் கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் படித்து வந்த இவா், சக நண்பா்களுடன் தாயனூா் பகுதியிலுள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா்.

நீரில் மூழ்கியவா் நீண்ட நேரமாகியும் மேலே வராததால், சந்தேகமடைந்த அவரது நண்பா்கள் சப்தமிட்டனா். இதை கண்டு அக்கம் பக்கத்தினா் வந்து இம்ரான் அகமதுவைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT