மணப்பாறை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த இடைப்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது பாலமலையாண்டி கோயில். இங்கு அதிகாலை 3 மணியளவில் மா்ம நபா் ஒருவா் கோயில் உண்டியலை திருட முயற்சித்தாராம். அப்போது, பொதுமக்களின் சத்தம் கேட்டு அந்த நபா் தப்பியோடிவிட்டாா். இதுதொடா்பாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் புத்தாநத்தம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.