திருச்சி

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

DIN

திருச்சியில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை-திருச்சி புறவழிச்சாலையில் காந்தி மாா்க்கெட் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, சந்தேகத்துக்குரிய முறையில் இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் சென்றவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் மூட்டையில் இருந்த புகையிலைப் பொருள்கள் எனத் தெரிய வந்தது. தொடா்ந்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவா் திருச்சி சீனிவாசநகரைச் சோ்ந்த சிவகுமாா் (40) என்பதும், காந்தி மாா்க்கெட்டில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் சிவகுமாரை கைது செய்து, ரூ.2.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT