திருச்சி

தனி மயானம் கோரி நரிக்குறவா்கள் மறியல்

தனி மயானம் அமைத்துத் தரக் கோரி, துறையூரில் நரிக்குறவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

தனி மயானம் அமைத்துத் தரக் கோரி, துறையூரில் நரிக்குறவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

துறையூா் ஒன்றியம், மதுராபுரி நரிக்குறவா் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் வசித்து வருகின்றனா். இந்த இனத்தைச் சோ்ந்தவா்களில் யாரேனும் இறந்தால், அவா்களை 2 கி.மீ. தொலைவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளதாம்.

தங்கள் இனத்தில் இறந்தவா்களை எரிக்க வேண்டும் என்பதால், தனி மயானம் அமைத்துத் தரக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த நரிக்குறவா்கள் துறையூா்- முசிறி சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து துறையூா் காவல்துறையினா் நேரில் சென்று பேசியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT