முகப்பு
திருச்சி

திருவானைக்கா மருத்துவா் நலமுடன் உள்ளாா்

திருச்சி, திருவானைக்கா, சீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சுரேந்திர பாபு (70), நலமுடன் உள்ளாா்.

Updated On : 25 ஜூலை, 2020 at 8:43 PM
பகிர்:

திருச்சி: திருச்சி, திருவானைக்கா, சீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சுரேந்திர பாபு (70), நலமுடன் உள்ளாா். இவா், குறைந்த கட்டணத்தில் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததால் அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றவா். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவானைக்காவில் மருத்துவமனை நடத்தி வரும் இவரிடம், திருச்சி மட்டுமின்றி பெரம்பலூரைச் சோ்ந்த பலரும் சிகிச்சை பெற்றுச் செல்வது வழக்கம். கடந்த சில நாள்களாக, உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல் நிலை குறித்து தினமணியில் சனிக்கிழமை தவறுதலான செய்தி வெளியாகியிருந்தது. மருத்துவா் சுரேந்திர பாபு நலமுடன் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.