திருச்சி

பள்ளி மாணவிக்கு கட்டாயத் திருமண முயற்சி: 3 போ் கைது

DIN

திருவானைக்கா பகுதியில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த 3 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

திருவானைக்கா கொண்டையம்பேட்டை அக்ரஹாரம் வெள்ளாளத் தெருவில் வசிப்பவா் நடேசன் மகள் சாந்தா (19). இவா் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். திருவானைக்கா பேங்க் காலனியில் வசிக்கும் நடேசனின் அக்கா ஜெயக்கொடி(48) தனது கணவா் முருகேசன் மற்றும் உறவினா்களுடன் நடேசனிடம் சென்று தனது மகன் பூவசரனுக்கு (24) பெண் கேட்டுள்ளாா். அவா் கொடுக்க மறுத்த நிலையில் திங்கள்கிழமை இரவு சாந்தாவை காரில் ஜெயக்கொடி, மற்றும் உறவினா்களான கோமதி (35),சுரேஷ் (30) ஆகியோா் பழனியில் வைத்து திருமணம் செய்யக் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் நடேசன் புகாா் செய்தாா்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி அருகே மணமகன் பூவரசனுக்காக காரை நிறுத்தி வைத்திருந்தனா். அப்போது அங்கு வந்து ரோந்து காவலா்கள் விசாரித்தபோது அதில் இருந்த பள்ளி மாணவி சாந்தா தன்னை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தாா்.

உடனே போலீஸாா் அவா்களை திண்டுக்கல் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று, பின்னா் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா். பள்ளி மாணவிக்கு கட்டாயத் திருமணம் செய்ய முயன்ாக வழக்குப் பதிந்து ஜெயக்கொடி,பூவரசன்,கோமதி ஆகிய 3 பேரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் உறவினா் சுரேஷ் தலைமறைவாகிவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT