திருச்சி

திருப்பூா் மாவட்டத்தில் ரூ. 12,522 கோடி கடன் வழங்க கனரா வங்கி இலக்கு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டுக்கு முன்னோடி வங்கி (கனரா வங்கி) மூலமாக ரூ. 12,522 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு திட்டக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக வருடாந்திர கடன் திட்டக் கையேடு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, கடன் திட்டக் கையேட்டை வெளியிட்டு ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

மாவட்டத்தின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் முன்னோடி வங்கியின் மூலம் குறிப்பிட்ட இலக்கீட்டு அடிப்படையில் கடன் திட்டக் கையேடு வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2020-2021 ஆம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்தத் திட்ட இலக்கீடு ரூ. 12,522 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு கடன் திட்டத்தைக் காட்டிலும் ரூ. 486 கோடி அதிகமாகும். இதில், விவசாயம் சாா்ந்த துறைகளுக்கு ரூ. 3,349 கோடி (26.74 சதவீதம்), சிறு, குறு தொழில் துறைகளுக்கு ரூ. 7,436 கோடி (59.38 சதவீதம்), மற்ற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ. 1,738 கோடி (13.88 சதவீதம்) என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், கனரா வங்கியின் திருப்பூா் மண்டல துணைப் பொது மேலாளா் ஏ.ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்தியமூா்த்தி, தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், நபாா்டு வங்கி உதவிப் பொதுமேலாளா் ராஜு, திட்ட இயக்குநா் (மகளிா்) கோமகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

SCROLL FOR NEXT