திருச்சி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த நெல்லையைச் சோ்ந்த பொறியாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுாரைச் சோ்ந்தவா் வாசுதேவன் (30). விமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவா், கோவையில் கல்லூரியில் படிக்கும்போதே அதே கல்லூரியில் படித்த திருச்சியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளாா். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளாா். படிப்பு முடிந்த பிறகு, அவரவா் தங்களது ஊருக்கு திரும்பியுள்ளனாா். ஆனால், வாசுதேவன் அப்பெண்ணின் புகைப்படத்தை, தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து திருமணம் ஆனதாக சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளாா். இதனால் மனமுடைந்த அப்பெண் பெற்றோா் மூலம் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து வாசுதேவனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.