திருச்சி

திருவாரூா் முருகனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்

DIN

திருச்சி: திருச்சியில் பிரபல நகைக்கடை திருட்டில் வழக்கில் கைதான திருவாரூா் முருகனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி ஸ்ரீரங்கம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள திருவாரூா் முருகன் அண்மையில் வாதநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சைக்காக ஒருமாதம் அவகாசம் கொடுத்துள்ளனா்.

இதையடுத்து, அவரது வழக்குரைஞா் ஹரிபாஸ்கா், திருச்சி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். இதில், திருச்சி நகைக்கடை திருட்டு வழக்கில் முருகனுக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து திருச்சி அடுத்துள்ள சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் உள்ள வங்கியில் நடைபெற்ற திருட்டு, பாலக்கரையில் நடைபெற்ற திருட்டு ஆகிய வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நகைக்கடை திருட்டு வழக்கில் வழங்கிய ஜாமீன் அடிப்படையில், நெ.1 டோல்கேட் வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT