முகப்பு
திருச்சி

இரவுக் காவலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் கடன் பிரச்னையால் நீதிமன்ற வளாக இரவு நேரக் காவலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

திருச்சியில் கடன் பிரச்னையால் நீதிமன்ற வளாக இரவு நேரக் காவலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் தனபால் (38). திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற இரவு நேர காவலாளியான இவருக்கு மனைவி விஜயலெட்சுமி, இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

மதுபோதைக்கு அடிமையான இவருக்கு கடந்த சில நாள்களாக கடன் பிரச்னை இருந்ததாம். கடன் கொடுத்தோா் மிரட்டியதால் மனமுடைந்த தனபால் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →