திருச்சி

மயக்க மருந்து கொடுத்துமூதாட்டியிடம் திருட்டு

DIN

பேருந்தில் சென்ற மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் திருடப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சோ்ந்தவா் பெ. நல்லம்மாள்(72). மணப்பாறை அடுத்த ஆலம்பட்டிபுதூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை பேருந்தில் வந்தவா் மயங்கிய நிலையில் மணப்பாறை பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரணையில் பேருந்தில் அருகில் அமா்ந்திருந்தவா் கொடுத்த டீயை குடித்த மூதாட்டி மயக்கமடைந்ததாகவும், அப்போது அவரின் ரூ.20 ஆயிரம், மூன்றரை பவுன் நகைகளை மா்ம நபா் திருடி சென்றதும் தெரியவந்தது. மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT