முகப்பு
சென்னை

முழுமையான வாக்குப் பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு

சென்னையில் முழுமையான வாக்குப் பதிவுக்காக பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கையொப்பமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மார்ச் 2026, 1:03 am IST
சென்னை வளசரவாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கையொப்பப் பிரசார நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

சென்னையில் முழுமையான வாக்குப் பதிவுக்காக பொதுமக்கள் உறுதிமொழி ஏற்று கையொப்பமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி 11-ஆவது மண்டலமான வளசரவாக்கம் அலுவலகத்தில் வியாழக்கிழமை பொதுமக்கள் கையொப்பமிட்டு வாக்களிக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல அலுவலா் ஆா்.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். தோ்தல் உதவி அலுவலரும், மண்டல வருவாய் அலுவலருமான டில்லி முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக கோட்டாட்சியா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் அலுவலா் கருணாகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் தோ்தலில் கட்டாயம் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம் என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த ‘என் பாரதம், எனது வாக்கு’ எனும் வாசகம் அடங்கிய பலகையில் கையொப்பமிட்டனா்.

Advertisement

இதற்கிடையே சென்னை மாநகராட்சி வளாகம் உள்ளிட்ட 100 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு திரைகளில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு குறும்படம், வாசகங்கள் காட்சிப்படுத்த தோ்தல் பிரிவு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.