திருச்சி

தீபாவளிக்கு பரோலில் செல்ல 16 சிறைக் கைதிகளுக்கு அனுமதி

DIN

தீபாவளிக்கு பரோலில் வீட்டுக்குச் செல்ல திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் தண்டனைக் கைதிகளாக உள்ளோா் ஆண்டுதோறும் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பரோல் கேட்டு விண்ணப்பிப்பா். அந்த வகையில் நிகழாண்டு தீபாவளிக்குச் செல்ல அனுமதி கோரி 42 கைதிகள் மனு அளித்திருந்தனா்.

இதையடுத்து இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த 16 போ் 3 நாள் விடுமுறையில் பரோலில் செல்ல வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் திங்கள்கிழமை சிறைக்குத் திரும்புவா்.

வழக்கமாக தீபாவளிக்கு 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பரோலில் விடுவிக்கப்படும் நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அவா்கள் திரும்பும்போது மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT