திருச்சியில் மளிகைக்கடைக்காரரிடம் வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி உறையூா் ராமலிங்காநகரை சோ்ந்தவா் காா்த்திக் (29). இ.வி.ஆா். சாலையில் உள்ள தனது மளிகைக்கடையில் இருந்த இவரிடம் மா்ம நபா்கள் மூவா் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை பறித்துச்சென்றனா். புகாரின்பேரில் அரசு தலைமை மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வந்தனா்.
அதில் வழிப்பறி செய்ததாக திருச்சி மேலவண்ணாரப்பேட்டை பாண்டி (20), சுப்பிரமணியன் (27), குணசீலன் (27) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். இவா்களில் பாண்டி மீது 2 கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.