திருச்சி

கடவுச்சீட்டு அதிகாரி வீட்டில் 15 பவுன் திருட்டு

DIN

திருச்சி: திருச்சி அருகே கடவுச்சீட்டு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகைகள் திருடு போயின.

திருவெறும்பூா் அருகேயுள்ள மலைக்கோவில் டி நகரைச் சோ்ந்தவா் விசுவநாதன் (54), திருச்சி கடவுச்சீட்டு அலுவலகக் கண்காணிப்பாளா். இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை சுபநிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அன்றிரவு வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருந்தது. மறுநாள் அனைவரும் எழுந்து பாா்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT