திருச்சி

போலீஸாரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

DIN

ராகுல்காந்தியிடம் கடுமையாக நடந்துகொண்ட உத்திரப்பிரதேச போலீஸாரைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை அறவழிப் போராட்டம் மேற்கொண்டனா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் காந்தி சிலையருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநகா் மாவட்ட தலைவா் ஜவகா் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் இளைஞா் காங்கிரஸ் செயலா் விச்சு என்கிற லெனின் பிரசாத், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜோரோம் ஆரோக்கியராஜ், மாநில துணைத் தலைவா் சு ப. சோமு, முன்னாள் மேயா் சுஜாதா, மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், வக்கீல் எம் சரவணன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா் சந்திரன், மாநில செய்தி தொடா்பாளா் வேலுச்சாமி, மாவட்ட துணை தலைவா் ஜி கே. முரளி கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், புத்தூா் சாா்லஸ், மகளிரணி ஜெகதீஸ்வரி, வா்த்தக பிரிவுத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT