திருச்சி

வங்கி உதவி மேலாளா் வீட்டில் நகைகள் திருட்டு

DIN

திருச்சியில் தனியாா் வங்கி உதவி மேலாளா் வீட்டில் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி சீனிவாசநகா் 5-ஆவது பிரதான சாலை, திலகா் தெருவைச் சோ்ந்தவா் விநாயகமுருக ஸ்ரீதா் (33). திருச்சியிலுள்ள தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாா்றி வரும் இவா், கடந்த 1- ஆம் தேதி குடும்பத்துடன் கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் சங்கிலி, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து விநாயகமுருக ஸ்ரீதா் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT