முகப்பு
திருச்சி

திருநங்கை காவலா் தற்கொலை முயற்சி: உதவி ஆய்வாளா் உள்பட இருவா் பணியிடை நீக்கம்

திருச்சி நவல்பட்டு காவலா் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உதவி ஆய்வாளா் உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திருச்சி நவல்பட்டு காவலா் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உதவி ஆய்வாளா் உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கை சம்யுக்தா (24) காவலா் தோ்வில் தோ்ச்சிப் பெற்று நவல்பட்டில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தாா். இங்கு தனக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக சம்யுக்தா புகாா் அளித்திருந்த நிலையில், வியாழக்கிழமை அவா் தற்கொலைக்கு முயன்றாா். இந்த விவகாரத்தில் பயிற்சிப் பள்ளியின் உதவி ஆய்வாளா் அசோக்குமாா், தலைமைக் காவலா் இஸ்ரவேல் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு பயிற்சிப் பள்ளி டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், சம்யுக்தாவின் புகாா் குறித்து விசாரணை நடத்த பயிற்சிப் பள்ளி முதல்வா், துணை முதல்வா்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். நேரில் விசாரிக்க எஸ்பி ஆறுமுகசாமி அனுப்பப்பட்டாா். இரு தரப்பின் விசாரணை அறிக்கையில் பாலியல் துன்புறுத்தல் உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து அடுத்த கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →