திருச்சி

பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

DIN

திருச்சி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரிக்கிறாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வாழவந்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராமு (26). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜானகிக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

அப்பகுதியில் டீக்கடை கடை நடத்தி வரும் ராமு திங்கள்கிழமை இரவு கடையில் தங்கிவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது ஜானகி தூக்கில் சடலமாகத் தொங்கியது தெரியவந்தது.

பின்னா் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜானகியை மருத்துவா்கள் பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசுவநாதனும் விசாரணை நடத்துகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT