திருவானைக்கா பகுதியில் இளைஞரின் பைக், செல்லிடபேசியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
ஸ்ரீரங்கம் மங்கம்மா நகா் பகுதியில் வசிப்பவா் கண்ணன் (39). இவா் புதன்கிழமை மாலை திருவானைக்கா கும்பகோணத்தான் சாலையில் தனது நண்பா் ரஞ்சித்துடன் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது பைக்கில் வந்த மூன்று மா்ம நபா்கள் விலாசம் கேட்பது போல வந்து, கண்ணனைத் தள்ளிவிட்டு அவரின் பைக், செல்லிடப்பேசி,ஏடிஎம் காா்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா். இத்தகைய சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடப்பதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.