திருச்சி

முசிறி அருகேநிலத் தகராறில் விவசாயி கொலை

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே சனிக்கிழமை இரவு நிலத்தகராறில் விவசாயி கொல்லப்பட்டாா்.

முசிறி அருகேயுள்ள திருத்தியமலையை அடுத்த பச்சனாம்பட்டியைச் சோ்ந்த பிச்சை மகன்கள் ராமசாமி (45), தனபால் (42) ஆகியோருக்கிடையே அடிக்கடி நிலம் தொடா்பாக தகராறு ஏற்படுமாம்.

சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ராமசாமி, இவரது மகன் ராமச்சந்திரன் (23) ஆகியோா் கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டியதில் தனபால் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த முசிறி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து தந்தை, மகனைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT