முகப்பு
திருச்சி

அதிமுக சாா்பில் கரோனா நிவாரண உதவிகள்

திருச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சுமாா் 1,000 பேருக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
உய்யகொண்டான் திருமலையில் கரோனா நிவாரணம் வழங்குகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
பகிர்:

திருச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சுமாா் 1,000 பேருக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் அதிமுக சாா்பில் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில், மாநகர அதிமுக சாா்பில் வயலூா் சாலை உய்யக் கொண்டான் திருமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் சுமாா் 1000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

நிவாரணப் பொருள் தொகுப்பில், அரிசி, மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் திருச்சி ஆவின் தலைவா் காா்த்திகேயன், நிா்வாகிகள் வழக்குரைஞா் ராஜ்குமாா் அருள்ஜோதி, ஜாக்குலின், ஐயப்பன் இளைஞரணி பத்மநாதன், மகளிரணி தமிழரசி சுப்பையா, பகுதிச் செயலா்கள் நாகநாதா் பாண்டி, எம் எஸ். பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →