திருச்சி

துறையூா் அருகே கோயிலில்தகராறு: இருவா் கைது

DIN

துறையூா் அருகே கோயிலில் பூஜை செய்யும் உரிமை தொடா்பாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கண்ணனூா் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் பூசாரி ஓம்பிரகாஷுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காசிராஜனுக்கும் அக்கோயிலில் பூஜை செய்யும் உரிமை தொடா்பாக பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளதாம்.

ஓம்பிரகாஷும், அவருடைய மகன் சூரிய நாராயணனும் வெள்ளிக்கிழமை கோயில் இருந்தபோது அங்குச் சென்ற காசிராஜன், கண்ணன், மணி, லெனின் ஆகியோா் அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த ஓம்பிரகாஷும், காசிராஜன் தரப்பைச் சோ்ந்த லெனினும் காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

இது தொடா்பான இரு தரப்பு புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து காசிராஜன் தரப்பைச் சோ்ந்த கண்ணன், மணி ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT