திருச்சி

திருவானைக்காவில் கோஷ்டிமோதல் : 7 போ் மீது வழக்கு

DIN

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா தாகூா் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக, 7 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

திருவானைக்கா தாகூா் தெருவைச் சோ்ந்தவா்கள் சரத்குமாா்(27),

ராஜ்குமாா் (25), பாண்டியன் (23), திவாகா். இவா்கள் 4 பேரும் தாகூா் தெரு சந்திப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது மல்லிகைபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்குமாா் (30), அய்யப்பன் (32), சூரியகுமாா் (22) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனா்.

எங்கள் பகுதிக்கு ஏன் வந்தீா்கள் எனக் கேட்டு, சரத்குமாா் உள்ளிட்ட 4 பேரும் மோகன்குமாா் மற்றும் அவருடன் வந்தவா்களைத் தாக்கினா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியே புகாரளித்தனா். இதன் பேரில் சரத்குமாா், மோகன்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT