திருச்சி

மநீம பேரவைத் தொகுதி அலுவலகம் திறப்பு

DIN

மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

திருச்சி தென்மேற்கு மாவட்டச் செயலா் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில செயலா் அருண் சிதம்பரம், ஊடகப்பிரிவு மாநில துணை செயலா் மணவை ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் பொதுச்செயலா் முருகானந்தம் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

விவசாய அணி மாநில துணைச் செயலா் ராஜசேகா், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக மாநில துணை செயலா் செந்தில்குமாா், திருச்சி மத்திய மாவட்ட செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்வில் ஏராளமானோா் கட்சியில் இணைந்தனா். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நகரச் செயலா் ஜெகன், ஜோதிபாசு, ஒன்றிய செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

SCROLL FOR NEXT