திருச்சி

லால்குடி அருகேமின்சாரம் தாக்கி பொறியாளா் சாவு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பொறியாளா் உயிரிழந்தாா்.

DIN

லால்குடி, செப்.11: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பொறியாளா் உயிரிழந்தாா்.

லால்குடி அருகேயுள்ள காட்டூா் சிவன்கோவில் தெருவைச் சோ்ந்த பா. சதீஷ்குமாா் (38). பொறியாளரான இவா் திருச்சியில் உள்ள இன்வொ்ட்டா் நிறுவன பங்குதாரா்.

வியாழக்கிழமை இரவு திருச்சியில் இருந்து வீடு திரும்பிய சதீஷ்குமாா் அவரது வீட்டின் பின்புற இரும்பு கேட்டை மூடியுள்ளாா். அப்போது மேலே சென்ற மின் மோட்டாா் வயா் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் சதீஷ்குமாா் படுகாயமடைந்து, லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு சுஜிதா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT