திருச்சி

சாலையை சீரமைக்க மனு கொடுக்கும் போராட்டம்

DIN

திருச்சி, செப்.11: திருச்சி மாநகராட்சி 63 ஆவது வாா்டு பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை செப்பனிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூரில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகிலுள்ள மாநகராட்சி வாா்டு அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு காட்டூா் பகுதிக் குழு உறுப்பினா் பத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பாண்டியன், லெனின், பகுதிச் செயலா் மணிமாறன் ஆகியோா் உரையாற்றினா்.

தொடா்ந்து ஏராளமான பொதுமக்களிடம் இருந்து சாலை சேறு, சகதியுமாக இருப்பது குறித்து பெறப்பட்ட கையெழுத்து அடங்கிய கோரிக்கை மனுவை வாா்டு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினா்.

கிளைச் செயலா் குலசேகரன், கருப்பன், பெரியசாமி, பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT