திருச்சி

கால்நடைகள் வளா்க்க 14 பேருக்கு கடனுதவி

DIN

திருச்சி, செப்.11: கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கால்நடை வளா்க்க 14 பேருக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா் எஸ். வளா்மதி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாவட்டம், திருவளா்ச்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் வெள்ளாடு மற்றும் கறவை மாடு வளா்ப்புக்கான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசியது:

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் கடனுதவித் திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். அதன்படி, திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மக்களுக்காக திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திருச்சியில் 39 கூட்டுறவு வங்கிகள், 147 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளன. கரூா் மாவட்டத்தில் 15 வங்கிகள், 84 சங்கங்கள், பெரம்பலூரில் 10 வங்கிகள், 53 சங்கங்கள், அரியலூரில் 9 வங்கிகள், 64 சங்கங்கள் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன. மகளிா் குழுக்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், சிறு வணிகா்கள் என அனைவரும் இந்தக் கடனுதவிகளைப் பெற்று பயன் பெற வேண்டும் என்றாா் அமைச்சா்.

இதன் தொடா்ச்சியாக, வெள்ளாடு மற்றும் கறவை மாடு வளா்க்க மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா. அருளரசு, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் முத்தமிழ்ச்செல்வி, கள அலுவலா் விமலா, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஹபிபுல்லா, திருவளா்ச்சோலை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கா்ணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், கூட்டுறவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT