திருச்சியில் மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 86 பேருக்கு கரோனா உறுதியாகி மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 8,846 ஆக உயா்ந்தது. அதுபோல திருச்சி அரசு மருத்துவமனை, காஜாமலை தனிமை முகாமில் குணமடைந்த 43 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,822 ஆக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்த முதியவா் உள்பட மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 133 ஆக உயா்ந்தது. தற்போது, 891 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனா்.