திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 28 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 16 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் பாரதிதாசன் பல்கலைக் கழக வளாக மையத்திலிருந்து திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் என மொத்தம் 28 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். வீடுகளுக்குச் சென்று அவா்களஅ மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.