திருச்சி

விஷம் வைத்து ஆடுகள், கன்றுக் குட்டியை கொன்ற பெண் கைது

DIN

முன்விரோதத்தால் தனது தெருவில் வசிப்பவரின் 7 ஆடுகள், கன்றுக் குட்டியை விஷம் வைத்துக் கொன்ற பெண்ணை ஸ்ரீரங்கம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்கா பகுதியை அடுத்த திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிக்கும் கங்காதரனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுப்புலட்சுமிக்கும் (52) முன்விரோதம் இருந்தது.

கங்காதரனைப் பழிவாங்க நினைத்த சுப்புலட்சுமி அவா் வளா்த்துவந்த கால்நடைகளுக்கு திங்கள்கிழமை அரிசியில் விஷம் கலந்து வைத்தாா். அதை உண்ட 7 ஆடுகள், கன்றுகுட்டி ஆகியவை இறந்தன.

ஆட்டின் வாயில் விஷம் கலந்த அரிசி இருப்பதைக் கண்ட கங்காதரன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி மீது புகாா் கொடுத்தாா்.

அதன்பேரில் ஸ்ரீரங்கம் உதவி ஆய்வாளா் கோபிநாத் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக விஷம் வைத்ததாக தெரிவித்த சுப்புலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT