திருச்சி

ஓடுபாதை மேம்படுத்தும் பணி நேரம் மாற்றியமைப்பு

DIN

திருச்சி விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தும் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓடுபாதை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. கரோனா, கனமழையால் ஓடுபாதை பணிகள் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டு, நேரமும் மாற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓடுபாதை மேம்படுத்தும் பணி நடந்ததால் இந்த நேரத்தில் விமான சேவை இயக்கப்படவில்லை. தற்போது இரவு 11.30 மணி முதல் காலை 8 வரை மேம்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதனால் பகல் நேரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை வழக்கம் போல கூடுதலாக இருக்கும். பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT