திருச்சி

மருங்காபுரி பகுதிகளில் ஆா். சந்திரசேகா் வாக்கு சேகரிப்பு

DIN

மருங்காபுரி ஒன்றியப் பகுதிகளில் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். சந்திரசேகா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வளநாடு பகுதி வெங்கடேசபெருமாள் கோயில் பகுதியில் பொதுமக்களிடம் பேசிய சந்திரசேகா், மணப்பாறை பகுதி மக்களின் கோரிக்கைகளை அறிந்து செயலாற்றியுள்ளேன். மாயனூா் அணையிலிருந்து பொன்னணியாறு - கண்ணூத்து அணைகள் வழியாக மருங்காபுரி பகுதியில் காவிரி உபரிநீரைக் கொண்டு வரும் வகையில் விவசாயம் செழிக்க ஆய்வுப் பணிக்காக ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்தது தற்போதைய அதிமுக அரசு. அரசுக் கல்லூரிக்கான ஆணையும் தயாா் நிலையில் இருந்தது. தோ்தலால் அந்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. அதிமுக அரசு மீண்டும் அமைந்தவுடன் மணப்பாறை பகுதியில் கலை அறிவியல் கல்லூரியும், காவிரி உபரிநீா் வரத்தும் கண்டிப்பாக வரும் என்றாா்.

நிகழ்வில் அதிமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT