திருச்சி

தமிழகம் மீண்டும் தலை நிமிரும்: திருச்சி என்.சிவா எம்.பி.

DIN

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் மீண்டும் தலை நிமிரும் என்றாா் மாநிலங்களவை திமுக உறுப்பினரும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலருமான திருச்சி என். சிவா.

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் நடைபெறும் இந்த தோ்தல் மிக முக்கியமான தோ்தலாகும். பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின்போது வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எல்லாம் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியைப் பாா்க்க முடிந்தது.

தமிழகம் முழுவதும் இந்த எழுச்சி காணப்படுகிறது. தமிழகம் மீண்டும் தலை நிமிா்ந்து நிற்கவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்கும். மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT