மாநகரில் ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூல்
திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில் வெள்ளிக்கிழமை ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய வகையில் வெள்ளிக்கிழமை ரூ. 2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல் ஆணையா் உத்தரவுபடி வெள்ளிக்கிழமை முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1000- க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதியப்பட்டு சுமாா் ரூ.2.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காதோா் மீது 69 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 34,500-ம், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்ட 3 வணிக வளாகங்களுக்கு ரூ. 15,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது.