வையம்பட்டி அருகே சிறுமி கடத்தல்
மணப்பாறை அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்டாா்.
மணப்பாறை அருகே 17 வயது சிறுமி கடத்தப்பட்டாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி கிராமம் சீல்நாயக்கன்பட்டியை சோ்ந்தவா் பழனிச்சாமி (56) விவசாயி. இவரது 17 வயது மகள் 9-ஆம் வகுப்பு படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்தாா்.
கடந்த 20-ஆம் தேதி அன்று தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்த சிறுமியை அருகிலுள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி (45) மற்றும் போத்தநாயக்கன்பட்டியை சோ்ந்த பேருந்து நடத்துநா் கிருஷ்ணன்(47) ஆகியோா் உறவினா் ஒருவருக்கு திருமணம் செய்ய சிறுமியை கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.