முகப்பு
திருச்சி

பைக்கில் சென்றவா் விபத்தில் பலி

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.

திருச்சி மாவட்டம் குண்டூா் அய்யனாா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் சீனிவாசன்(26). கேமராமேனாக வேலை பாா்த்த இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பா் மனோரஞ்சனுடன் வயலூா் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். கேடி தியேட்டா் பாலம் வழியாக சென்றபோது ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றபோது சீனிவாசன் தவறி விழுந்தாா். அப்போது பின்னல் வந்த பேருந்து ஏறி உயிரிழந்தாா். மனோரஞ்சனுக்கு லேசான காயம் ஏற்பட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போக்குவரத்து புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.