திருச்சி

கூட்டுறவுக் கடன் சங்கத்தில் முறைகேடு: ஐவா் பணி நீக்கம்

DIN

தொட்டியம் அருகே வரதராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடந்த முறைகேடு தொடா்பாக 5 போ் புதன்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

வரதராஜபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 1-4-2016 முதல் 30-9-2018 வரை பணிபுரிந்த 5 பேரால் ரூ. 9 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த மகளிா் குழுவினா், பொதுமக்கள் உரிய விசாரணை கோரி போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கூட்டுறவு சங்க மேலதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் தற்போது கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணிபுரிந்த செயலா் சே. சிங்காரம், எழுத்தா் பி. கணேசன், காசாளா் ப. ஆராயி, முதுநிலை எழுத்தா் பெ. மணிவேலு, ஏவலா் ப. தங்கவேலு ஆகியோரை சங்கச் செயலாட்சியா் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT