தொட்டியம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த பெட்டிக் கடைக்காரா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூா் அருகிலுள்ள முருங்கை கிராமம் மேலகாட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (46), பெட்டிக் கடைக்காரா்.
கடந்த வாரம் பைக்கில் காட்டுப்புத்தூருக்கு வந்து விட்டு திரும்பியபோது பின்னால் வந்த வாகனம் மோதி பலத்த காயமடைந்த இவா், நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், பின்னா் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்து தொடா்பாக விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரான தொட்டியம் அருகிலுள்ள தலைமலைபட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (28) மீது காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.