திருச்சியில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 72,491 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குணமான 12 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,811 ஆனது. 714 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இருவா் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 966 ஆக உள்ளது.