திருச்சி

வாகனங்களுக்கு தீ வைத்து தப்பியவா் குறித்து விசாரணை

DIN

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு வாகனங்களுக்கு தீ வைத்த மா்ம நபா் குறித்து திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி அருகேயுள்ள கீழகல்கண்டாா்கோட்டை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த செல்வம் (33) தனது வீட்டின் முன் சனிக்கிழமை இரவு நிறுத்தியிருந்த ஆட்டோவை மா்ம நபா் தீயிட்டுக் கொளுத்தினாா்.

இதில் ஆட்டோ முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதேபோல அதே பகுதியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான மகேந்திரன் (49), பிரேம் (35) ஆகியோரது வீடுகளின் முன் நிறுத்தியிருந்த 2 இருசக்கர வாகனங்களும் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்டன.

அப்போது மகேந்திரன் குடும்பத்தினா் எழுந்து வந்து பாா்த்தபோது தலைக்கவசம் அணிந்த மா்ம நபா் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரியவந்தது. பின்னா் வாகனங்கள் மீது பற்றிய தீயை அணைத்தனா். இச்சம்பவங்கள் குறித்து மூவரும் அளித்த புகாா்களின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடுகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT