திருச்சி

நீளம் தாண்டுதல்: இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்ட திருச்சி வீரா்

DIN

நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய அணிக்கு திருச்சி மாவட்ட தடகள வீரா் மணிகண்டன் தோ்வாகியுள்ளாா்.

போலந்து நாட்டிலுள்ள லுப்ளின் நகரில் ஆக.23, 28 ஆகிய நாள்களில் சா்வதேச காது கேளாதோா் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அனைத்து இந்திய காதுகேளாதோா் தடகள கவுன்சில் சாா்பில் புதுதில்லி ஐவஹா்லால் நேரு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த தடகள வீரா் கே. மணிகண்டன் 100 மீட்டா் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய அணிக்குத் தோ்வானாா்.

இவருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கச் செயலா் டி. ராஜூ, மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் ஆகியோா் அடுத்த வாரம் பாராட்டு விழா நடத்தி வழியனுப்பவுள்ளனா். மேலும், அவருக்கு பல்வேறு அமைப்புகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT